இயற்கை – பகுதி 2

திகட்டா வானம்
தழைக்கும் தரணி
தெரியா எல்லை
துதிக்கும் பறவை
துடிக்கும் சிறகு
துள்ளும் பூச்சி

தவழும் பொழுது
தளரா மாலை
தணிந்த இரவு
தணியா தழல்
தூங்கா விண்மீன்
துயிலும் பனி
தேயா நிலவு
துணிந்த விடியல்

துவளா மலர்
துளிரும் கதிர்
தீண்டும் தென்றல்
தவிக்கும் அரும்பு
தீஞ்சுவை கனி
துளி தேன்

தாலாட்டும் மரம்
தள்ளாடும் இதழ்
தடம்மாறும் ஊற்று
திகைப்பூட்டும் மின்மினி
திசையெங்கும் வானவில்

தேங்கா கானல்நீர்
தொடரும் மலை
தேம்பும் மேகம்
திக்கிடும் மின்னல்
தாளமிடும் இடி

திரண்ட காடு
தெளிந்த அருவி
தழுவும் சாரல்
திமிரும் கடல்
தாவும் அலை
தாளும் புவி
தீராத் தனிமை

போதும் நான் வாழ்வதற்கு!

மிகை தொடரும்...
வசந்த் சுகுமார்

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

Leave a comment