என்னை பகுத்தறிவது எப்போது? நானின்றி உலகில்லை என்றெண்ணிய மருட்சி
எதைத் தேடி போகின்றேன்?தேடும் பொருளே என்னுள் உள்ளதோ?
இயக்கும் ஆட்சியும் இயங்கும் காட்சியும் ஒன்றோ? மெய்ப்பொருளோ?
மெய் என்னை இத்தனை வருத்தியும் அது பொய்யென உணர மறுப்பேனோ?
வெற்றி, புகழுக்கு அடிமையென பற்றியே வாழ்நாள் மெலியுமோ?
நல்லறிவை கொடுத்த தெய்வம் அதை மீறும் ஆற்றலை எனக்கேன் அளித்தனையோ?
கடந்தவனையும் உள்ளவனையும் என்னுள் உணரத் தவறினேன்
ஆழ்ந்த பொருள் அறிய கற்ப காலம் போதுமா?
பிறந்து பிறவாமையில் முடிவது போல் அனைத்துமறிந்து அறியாமையில் முடியுமோ?
என்னை உணர்ந்து உன்னை உணரவைப்பாயா? உன்னை உணர்ந்து என்னை உணரவைப்பாயா?
தேடலிலே தேய்ந்து மாய்வேனோ? எனைத் தொலைத்தே தெருட்சி பெறுவேனோ!
இமை மூடி தேடுகின்றேன்! வழி பற்றி தொலைய! உன் அடி பற்றி தெளிய!
“நான்” கரைய. “நீ” மலர்வாயோ….? உணர்வேனோ?
வசந்த் நான் பிரம்மம்!!!
